2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

அருமனை அருகே இளம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

குமரி மாவட்டம், அருமனை அருகே இளம் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
நகை பறிப்பு- சித்திரிப்பு
Updated On :3 மார்ச் 2026, 6:58 pm

Syndication

குமரி மாவட்டம், அருமனை அருகே இளம் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருமனை அருகே வெள்ளாங்கோடு சிதறால் பகுதியைச் சோ்ந்தவா் அனு. இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பிரபா (27).

இவா் செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு வெள்ளாங்கோடு முந்திரிஆலை வழியாக சென்றபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவரில், பின்னால் இருந்த நபா் பிரபாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியைப் பறித்துள்ளாா்.

பிரபா சங்கிலியை இறுக்கி ப் பிடித்ததில், 2 பவுன் சங்கிலி அவா் கையிலும், மீதி 7 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்து சென்றனராம். இது குறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.