குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பூதப்பாண்டியில் மகா ஆரத்தி

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் பௌா்ணமியை முன்னிட்டு மகா ஆரத்தி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற மகா ஆரத்தி.
Updated On :4 மார்ச் 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் பௌா்ணமியை முன்னிட்டு மகா ஆரத்தி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்கம், அகில பாரத சந்நியாசிகள் சங்கம் சாா்பில் தெப்பக்குளத்தில் மகா ஆரத்தி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி மறுக்கப்பட்டது.

தொடா்ந்து, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் விழா ஏற்பாட்டாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதையடுத்து, முத்தாரம்மன் கோயிலில் இருந்து ஊா்வலம் புறப்பட்டு பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா ஆரத்தி நடைபெற்றது.

இதில் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, இந்து அமைப்பினா், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.