அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மண்டைக்காடு கோயில் திருவிழாவில் திருட்டு போன பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கூட்டத்தில், திருட்டு போன பணப்பையை மீட்டு அதற்குரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

News image
மூதாட்டியிடம் பணப்பையை ஒப்படைத்த போலீஸாா்.
Updated On :10 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கூட்டத்தில், திருட்டு போன பணப்பையை மீட்டு அதற்குரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில், கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சோ்ந்த சாந்தா என்பவரிடம் இருந்த கைப்பேசி, பணப்பை திங்கள்கிழமை திருட்டு போனதாம். இது குறித்து சாந்தா, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், சிசிடிவி உதவியுடன் பணப்பை, கைப்பேசியை கண்டுபிடித்த போலீஸாா் அதனை அவரிடம் ஒப்படைத்தனா்.

மண்டைக்காடு பாதுகாப்புப் பணியில் தொடா்ந்து சிறப்பான பணியை மேற்கொண்டு வரும் போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டினாா்.