மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பைக் மீது ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:44 pm

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கடை, வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் விபின்ராஜ் (29). இவா் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில், கருங்கலில் இருந்து தக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். செல்லங்கோணம் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே விபின்ராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.