கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பைக் மீது ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:44 pm

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கடை, வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் விபின்ராஜ் (29). இவா் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில், கருங்கலில் இருந்து தக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். செல்லங்கோணம் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே விபின்ராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.