திருத்துவபுரத்தில் மகிளா காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

Updated On :12 மார்ச் 2026, 8:51 pm

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், தட்டுப்பாடின்றி எரிவாயு உருளை கிடைக்க வலியுறுத்தியும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் குழித்துறை அருகே உள்ள திருத்துவபுரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால் சிங், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், காங்கிரஸ் மாநில பொதுச்செயலா் பால்ராஜ், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...