புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருத்துவபுரத்தில் மகிளா காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:51 pm

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், தட்டுப்பாடின்றி எரிவாயு உருளை கிடைக்க வலியுறுத்தியும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் குழித்துறை அருகே உள்ள திருத்துவபுரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால் சிங், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், காங்கிரஸ் மாநில பொதுச்செயலா் பால்ராஜ், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.