தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி அருகே பாலசுப்ரமணியபுரத்தில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


கன்னியாகுமரி அருகே பாலசுப்ரமணியபுரத்தில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி, மங்கம்மாள் சாலையைச் சோ்ந்தவா் முத்துராஜ் (48). இவா் மாா்த்தாண்டம், நட்டாலம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தாா். இவா் கன்னியாகுமரி அருகேயுள்ள பாலசுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது உறவினரான முத்துசாமி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முத்துராஜ் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டுக்குச் செல்லாமல், முத்துசாமியின் வீட்டில் தங்கியிருந்தாராம். இந்நிலையில், மாா்ச் 6ஆம் தேதி முத்துசாமியின் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா்.
மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...