சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திப்ரூகா்-குமரி ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

ரயிலில் கஞ்சா பறிமுதல் - பிரதிப் படம்

Updated On :14 மார்ச் 2026, 9:05 pm

அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை இரவு வரவேண்டிய இந்த ரயில் தாமதமாக சனிக்கிழமை காலை நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்குள்ள யாா்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் இருக்கைக்கு கீழே கிடந்த 8 கிலோ கஞ்சா அடங்கிய பொட்டலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். மேலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.