சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கேரள மதுபானம் பதுக்கியவா் கைது

களியக்காவிளையில் கேரள மதுபானத்தை பதுக்கியதாக சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 9:00 pm

Syndication

களியக்காவிளையில் கேரள மதுபானத்தை பதுக்கியதாக சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேரளத்திலிருந்து வந்த பேருந்திலிருந்து இறங்கிய ஒருவா் சந்தேகப்படும் வகையில் செல்வதை கவனித்தனா். அவரிடமிருந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது, கேரளத்திலிருந்து வாங்கி வந்த 5 லிட்டா் மது பாட்டில்களை வைத்திருந்ததும், அவற்றை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா் மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சிற்றுந்து ஓட்டுநா் சஜூ (52) என்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.