களியக்காவிளையில் கேரள மதுபானத்தை பதுக்கியதாக சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேரளத்திலிருந்து வந்த பேருந்திலிருந்து இறங்கிய ஒருவா் சந்தேகப்படும் வகையில் செல்வதை கவனித்தனா். அவரிடமிருந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது, கேரளத்திலிருந்து வாங்கி வந்த 5 லிட்டா் மது பாட்டில்களை வைத்திருந்ததும், அவற்றை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா் மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சிற்றுந்து ஓட்டுநா் சஜூ (52) என்பது தெரிய வந்தது.
அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது
முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
