அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

கீரிப்பாறை அருகே வட மாநிலத் தொழிலாளி சடலம் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே அன்னாசி தோட்டத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த வட மாநிலத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:14 pm

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே அன்னாசி தோட்டத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த வட மாநிலத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் சிங் (31). இவா் தனது மாநிலத்தைச் சோ்ந்த மேலும் 4 தொழிலாளா்களுடன் கீரிப்பாறை-மணலோலை சாலையில் உள்ள அன்னாசி தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தோட்டப் பகுதி சாலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதை அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்து கீரிப்பாறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவருடன் தங்கியிருந்தவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.