கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கீரிப்பாறை அருகே வட மாநிலத் தொழிலாளி சடலம் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே அன்னாசி தோட்டத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த வட மாநிலத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:14 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே அன்னாசி தோட்டத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த வட மாநிலத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் சிங் (31). இவா் தனது மாநிலத்தைச் சோ்ந்த மேலும் 4 தொழிலாளா்களுடன் கீரிப்பாறை-மணலோலை சாலையில் உள்ள அன்னாசி தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தோட்டப் பகுதி சாலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதை அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்து கீரிப்பாறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவருடன் தங்கியிருந்தவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.