ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுக்கடை அருகே அழுகியநிலையில் கூலித்தொழிலாளி சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள ஈந்திக்காட்டுவிளை பகுதியில் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

News image

சடலம்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே உள்ள ஈந்திக்காட்டுவிளை பகுதியில் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

பூட்டேற்றி, ஈந்திக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமாா் (57). தொழிலாளியான இவா் பலஆண்டுகளாக தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக புதுக்கடை போலீஸாருக்கு அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, சுரேஷ்குமாா் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ்குமாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.