அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

புதுக்கடை அருகே அழுகியநிலையில் கூலித்தொழிலாளி சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள ஈந்திக்காட்டுவிளை பகுதியில் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

News image

சடலம் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:55 pm

புதுக்கடை அருகே உள்ள ஈந்திக்காட்டுவிளை பகுதியில் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

பூட்டேற்றி, ஈந்திக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமாா் (57). தொழிலாளியான இவா் பலஆண்டுகளாக தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக புதுக்கடை போலீஸாருக்கு அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, சுரேஷ்குமாா் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ்குமாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.