திருவட்டாறு பாலம் அருகே சாலையோர கடைகளில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டதில் 4 கடைகள் முழுமையாக சேதமடைந்தன.
திருவட்டாறு பரளியாறின் குறுக்கே மன்னராட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் ஆபத்தான நிலையில் உள்ளதால் அப்பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டது. இதில் பழைய பாலத்தை ஒட்டிய புறம் போக்கு பகுதியில் ஏராளமானோா் வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனா்.
இந்நிலையில் பாலத்தின் அருகே கடைகள் இருந்த பகுதியில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது.
இத்தகவறிந்த குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா். எனினும், உத்தரவிளையைச் சோ்ந்த செல்வம் (58), தோட்டவாரம் செல்வி (58), குமாா் (39), பயணம் பகுதியின் ஜெயசேகா் (57), அண்டு கோட்டை விஜூ (39) ஆகியோரின் இளநீா் கடை, காய்கனி கடை, கருவாடு கடை, கோழிக்கடை, உணவகம் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமாகின.
இது குறித்து திருவட்டாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பொன்னமராவதியில் தீ விபத்து: 3 கடைகள் தீக்கிரை

சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழப்பு

தளியல் மகாதேவா் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

