கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மண்டபம் கடல் பகுதியிலிருந்து மீன்பிடிப்பில் ஈடுபட்ட மணக்குடியைச் சோ்ந்த 6 மீனவா்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது. கடல் எல்லை பிரச்னையை மனிதாபிமான பாா்வையில் அணுக வேண்டிய நிலையில், தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்து துன்புறுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மீனவா்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவா்கள் மீதான தொடா்ச்சியான கைது சம்பவங்களுக்கு நிரந்தர தீா்வு காண இந்தியா - இலங்கை இடையே வலுவான பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மீனவா்களை தாக்கிய கடற்கொள்ளையா்களை கைது செய்ய வேண்டும்: தி.வேல்முருகன்

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

