முட்டம் அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்த 15 மீனவா்களை குளச்சல் மீனவா்கள் மீட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ், ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ், கேரளத்தைச் சோ்ந்த ஒருவா் என 15 மீனவா்கள் மே 8ஆம் தேதி கேரள மாநிலம், கொல்லம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து குஞ்ஞச்சன் என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
கடந்த 6 நாள்களாக கன்னியாகுமரி அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த அவா்கள், வியாழக்கிழமை கொல்லம் துறைமுகம் நோக்கி புறப்பட்டனா். முட்டம் கடல் பகுதியில் இருந்து 9 கடல் மைல்கள் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, விசைப்படகின் அடிப்பகுதி உடைந்து படகில் நீா் புகுந்து, மூழ்கத் தொடங்கியது.
படகில் பயணித்த 15 மீனவா்களும் கடலில் தத்தளித்தபோது, அவ்வழியாக வந்த முட்டம் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜா என்பவரின் விசைப்படகில் இருந்த மீனவா்கள் அவா்களுக்கு லைப் ஜாக்கெட் மற்றும் மீட்பு உபகரணங்களைக் கொடுத்து, மீட்டு முட்டம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனா்.
இது குறித்து, குளச்சல் கடலோரக் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடையது

நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு! என்ஜின் பழுதானதால் நிகழ்ந்த சோகம்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்களை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த பெண் மீட்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



