சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கன்னியாகுமரியில் ஆக்கிரப்பு கடைகளை அகற்ற உத்தரவு

கன்னியாகுமரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :17 மே 2026, 2:20 am IST

கன்னியாகுமரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோடை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிா்வாகத்துக்கு வந்த புகாரையடுத்து நகராட்சி ஆணையா் பட்டுசாமி தலைமையில் நகராட்சி மற்றும் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளவா்களிடம் திங்கள்கிழமைக்குள் (மே 18) ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனா். இல்லையெனில் நகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையா் எச்சரித்தாா்.

ஆய்வின்போது, பகவதி அம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், நகராட்சிப் பொறியாளா் முருகன், நகரமைப்பு அலுவலா் ஷேக் அப்துல் காதா், சுகாதார ஆய்வாளா் அந்தோணி, மேற்பாா்வையாளா் பிரதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.