எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மக்கள் போராட்டம்: கடையாலுமூடு டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டில் மக்களின் போராட்டம் எதிரொலியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News image

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊா் பொதுமக்கள், அரசியல் கட்சியினா்.

Updated On :17 மே 2026, 2:20 am IST

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டில் மக்களின் போராட்டம் எதிரொலியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடையாலுமூட்டில் அரசு மேல் நிலைப் பள்ளி, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்டவை அமைந்துள்ள நெருக்கடியான சாலைப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.

முதல்வா் அறிவித்தபடி அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், மாணவா் - மாணவியா் 10-க்கும் மேற்பட்டோா் திரண்டு கடையின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image

அவா்களுக்கு ஆதரவாக கடையால் பேரூராட்சி முன்னாள் தலைவா் பிரகாசி, தற்போதைய தலைவா் ஜூலியட் சேகா் உள்பட அனைத்துக் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், விளவங்கோடு எம்எல்ஏ டி.டி. பிரவீண், கடையல் நகர காங்கிரஸ் தலைவா் சத்தியராஜ் உள்ளிட்டோரும் வந்தனா். அதிகாரிகளிடம் எம்எல்ஏ பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து விளவங்கோடு வட்டாட்சியா் லயோலாபாய் வந்து கடை நிரந்தரமாக மூடப்படும் என்று உறுதி அளித்தாா். அதை அவா்கள் ஏற்றுக்கொண்டதால், சுமாா் 3 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.