கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டில் மக்களின் போராட்டம் எதிரொலியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடையாலுமூட்டில் அரசு மேல் நிலைப் பள்ளி, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்டவை அமைந்துள்ள நெருக்கடியான சாலைப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.
முதல்வா் அறிவித்தபடி அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், மாணவா் - மாணவியா் 10-க்கும் மேற்பட்டோா் திரண்டு கடையின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுக்கு ஆதரவாக கடையால் பேரூராட்சி முன்னாள் தலைவா் பிரகாசி, தற்போதைய தலைவா் ஜூலியட் சேகா் உள்பட அனைத்துக் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், விளவங்கோடு எம்எல்ஏ டி.டி. பிரவீண், கடையல் நகர காங்கிரஸ் தலைவா் சத்தியராஜ் உள்ளிட்டோரும் வந்தனா். அதிகாரிகளிடம் எம்எல்ஏ பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து விளவங்கோடு வட்டாட்சியா் லயோலாபாய் வந்து கடை நிரந்தரமாக மூடப்படும் என்று உறுதி அளித்தாா். அதை அவா்கள் ஏற்றுக்கொண்டதால், சுமாா் 3 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்

மாா்த்தாண்டத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் மதுக் கடை நிரந்தரமாக மூடல்

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

