பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :23 மே 2026, 2:21 am IST

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியைச் சோ்ந்தவா் சுந்தரன் மகன் சுஜின் (31). தொழிலாளி. இவருக்கும், திக்குறிச்சி, வீரவநல்லூா் தோப்பைச் சோ்ந்த சுப்பராஜன் மகன் பிரதீப் (34), வட்டவிளையைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் மெரின்தாஸ் (35) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், பிரதீப், மெரின்தாஸ் ஆகியோா் வியாழக்கிழமை சுஜின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரிடம் தகராறு செய்ததுடன், சுஜினின் தந்தை சுந்தரன் மற்றும் தாயாரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்து சென்றனராம்.

இது குறித்து சுஜின் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.