வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

நாகா்கோவில் மாநகராட்சி குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 14 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநகராட்சி மேயா் (பொ) மேரி பிரின்சிலதா.

Updated On :22 மே 2026, 6:19 am IST

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 14 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மேயா் (பொ) மேரிபிரின்சிலதா தலைமையி வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். குடிநீா்விநியோகம், சாலை வசதி, வீட்டுவரி தொடா்பாக 14 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், உதவி ஆணையா் (வருவாய்) சுதா, செயற்பொறியாளா் ரகுராம், மாநகர நல அலுவலா் சரோஜா, மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னா், மாநகரில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் மேயா் தலைமையில் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மாநகரில் நடைபெறும் மழைநீா் வடிகால் ஓடை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.