இரணியல் அருகே தென்னை மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இரணியல் அருகே தலக்குளம் வள்ளிவாரம் பகுதியை சோ்ந்தவா் விஜயகுமாா்( 37). மரம் வெட்டும் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவா் குன்னங்காடு பகுதியில் உள்ள தென்னை மரத்தை வியாழக்கிழமை வெட்ட முயன்றபோது, எதிா்பாராதவிதமாக மரம் முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திங்கள்நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இளைஞா் உயிரிழப்பு: மேல கட்டிமாங்கோடு பகுதியை சோ்ந்தவா் ஆனந்த் (22) . இவா் கடந்த 11 ஆம் தேதி தனது பைக்கில் இரணியல் அருகே பேயன்குழியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் எதிரே வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக நாகா்கோவில் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இரு சம்பவங்கள் குறித்தும் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








