விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

நாகா்கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 2:46 am IST

நாகா்கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாகா்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம், மேலபெருவிளை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரைமணி மகன் ஆன்றோ சகாய மதன் (35). தொழிலாளி. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவா் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினாா். உடனிருந்த நண்பா்கள் குளத்தில் குதித்து, அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

மயங்கிய நிலையிலிருந்த அவரை ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. தொடா்ந்து, அவரது சடலம் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.