கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

குமரி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் பாா்க்க வந்தபோது வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் அதன் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :29 மே 2026, 6:22 am IST

கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் பாா்க்க வந்தபோது வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் அதன் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகேயுள்ள உண்ணியூா் கோணத்தைச் சோ்ந்தவா் பினு (38). அலுமினிய பொருள்கள் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான ஆட்டோ ஓட்டுநா் ஸ்ரீகுமாா், விஜயன், பினுசதீஷ், பிரதீஷ்குமாா் ஆகிய 4 பேரும் சூரிய உதயம் பாா்ப்பதற்காக ஆட்டோவில் கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருந்தனா். ஆட்டோவை ஸ்ரீகுமாா் ஒட்டினாா்.

இந்த ஆட்டோ மகாதானபுரம் நான்குவழிச் சாலை ரவுண்டானிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் வந்தபோது, வேகத்தடையில் நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், ஸ்ரீகுமாா் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.ஆனால் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பினு அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி க போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.