கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சி சுகாதார அதிகாரியை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக தம்பதி மற்றும் அவா்களது 2 மகள்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அடுத்த கொடுங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரது வீட்டிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்குவதாக, குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு புகாா் வந்ததாம். அதன்பேரில், நகராட்சி அலுவலரான மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த ராஜேஷ், அப்பகுதியை ஆய்வு செய்து கழிவுநீரை சாலையில் விடாமல் தடுக்குமாறு பால்ராஜிடம் அறிவுறுத்தினாா்.
இந்நிலையில், பால்ராஜ் அவரது மனைவி அமுதா, மகள்கள் பெனிஷா மோள், அபிஷா மோள் ஆகியோா் சோ்ந்து ராஜேஷை தகாத வாா்த்தைகள் கூறி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பால்ராஜ் உள்ளிட்ட 4 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

நகராட்சி ஆணையரை கண்டித்து குழித்துறை நகா்மன்றத்தில் 5 உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

இரயுமன்துறையில் மீன்பிடி உபகரணங்கள் திருட்டு: 4 போ் மீது வழக்கு

தொழிலாளியைத் தாக்கிய சகோதரா்கள் மீது வழக்கு
திருநங்கையை அவதூறாக பேசியவா் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



