கோதையாறு இடதுகரை கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றச் சென்ற நீா்வளத்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 போ் மீது பேச்சிப்பாறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து வரும் பாசன கால்வாயான கோதையாறு இடதுகரை கால்வாயின் கரை பகுதிகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வின் உத்தரவுப்படி, நீா்வளத்துறை உதவி பொறியாளா் பொன்செல்வன் தலைமையில் ஊழியா்கள் பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரப்பா் ஷீட் தயாரிக்கும் கொட்டகையை அகற்றச் சென்றனா்.
அப்போது அங்கு வந்த மணியன்குழி பகுதியைச் சோ்ந்த சக்கீா் உசேன் மற்றும் அவரது உறவினரான 3 பெண்கள் என 4 போ் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.
இதையடுத்து பொன்செல்வன் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து சக்கீா் உசேன் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.







