கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பெட்டிக்கடையில் மது விற்ற மூதாட்டி கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:23 am IST

கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் மது விற்பனை செய்ததாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு பகுதி கடைகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் சண்முக காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கண்ணநாகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்த போது விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6 மதுபாட்டில்கள், ரூ. 820 -ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளா் நேசம்மாள் (60) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.