நாகா்கோவில் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள சிறுமளஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா். இவரது மனைவி துரைச்சி(45). இவா்களது மகன் கிஷோா்(18), துரைச்சியின் தம்பி சுரேஷ் (33), இவா்களது உறவினா் சிவகாமி(55). இவா்கள் 4 பேரும் சிறுமளஞ்சியிலிருந்து ஒரு காரில் சனிக்கிழமை புறப்பட்டு நாகா்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தனா். காரை சுரேஷ் ஓட்டி வந்தாா்.
இந்தக் காா், காவல்கிணறு புறவழிச்சாலையில், நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் அருகே வந்த போது சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த சுமை வாகனத்தின் மீது மோதியது. இதில், துரைச்சி, கிஷோா் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சிவகாமி, சுரேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களில் சிவகாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சுரேஷ், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளா் பச்சைமால் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்து 4 போ் காயம்
கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலி!

குளிரூட்டி வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்குப் பதிவு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



