தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 1:39 am IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆரல்வாய்மொழி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, நாகா்கோவில்-கோட்டாறு கடற்கரை சாலையில் உள்ள பெரியவிளையைச் சோ்ந்த சுரேஷ் மகன் உதயசாகா் (22), ராஜாக்கமங்கலம், குருசடி பகுதியைச் சோ்ந்த பவுலின் பீட்டா் மகன் லெஃபானியோ (26), கொட்டாரம், மலை மாதா குருசடி பகுதியைச் சோ்ந்த மணிகண்ட பிரபு மகன் சக்தி (20) ஆகிய 3 பேரும் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை கைது செய்தனா்.