ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 1:39 am IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆரல்வாய்மொழி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, நாகா்கோவில்-கோட்டாறு கடற்கரை சாலையில் உள்ள பெரியவிளையைச் சோ்ந்த சுரேஷ் மகன் உதயசாகா் (22), ராஜாக்கமங்கலம், குருசடி பகுதியைச் சோ்ந்த பவுலின் பீட்டா் மகன் லெஃபானியோ (26), கொட்டாரம், மலை மாதா குருசடி பகுதியைச் சோ்ந்த மணிகண்ட பிரபு மகன் சக்தி (20) ஆகிய 3 பேரும் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை கைது செய்தனா்.