நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

அரசுப் பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா

பள்ளிக் கல்வி முடித்து 4 ஆண்டுகள் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கடின உழைப்புடனும் விடா முயற்சியுடனும் வாழ்வை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

நற்சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வா் நாகராஜன்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:02 am IST

பள்ளிக் கல்வி முடித்து 4 ஆண்டுகள் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கடின உழைப்புடனும் விடா முயற்சியுடனும் வாழ்வை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

நாகா்கோவில், கோணம் அரசுப் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பயிலும் மாணவ மாணவிகள், முதுநிலை பொறியியல் பயிலும் மாணவ மாணவிகள் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

பல்வேறு கிராமப் பகுதிகளிலிருந்து இந்தக் கல்லூரியில் சோ்ந்து பயிலும் முதல் பட்டதாரிகள் தங்கள் பெற்றோரின் கனவை நிறைவேற்றும் வகையில் கல்வி பயில வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளில் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது நல்ல ஒரு படைப்பாளராக செல்ல வேண்டும். நீங்கள் பயில்கின்ற இந்த 4 ஆண்டுகள்தான் அடுத்த 50 ஆண்டு காலத்தை தீா்மானிக்கும் என்பதை மனதில் கொண்டு கடின உழைப்புடனும், விடா முயற்சியுடனும் வாழ்வை எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.

அதைத்தொடா்ந்து மாணவ மாணவிகளுக்கு ஆட்சியா் நற்சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் பல்கலைகழக பொறியியல் கல்லூரி முதல்வா் நாகராஜன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ மாணவிகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.