
விநாயகா் சிலை ஊா்வலம்: அதிகாரிகளுடனான ஆட்சியா் கலந்தாய்வுக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட த்தில் விநாயகா் சிலை அமைப்பது, வாகனங்களில் கொண்டு சென்று கரைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள்.
கன்னியாகுமரி மாவட்ட த்தில் விநாயகா் சிலை அமைப்பது, வாகனங்களில் கொண்டு சென்று கரைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சொத்தவிளை, சின்னவிளை, சங்குத்துறை, வெட்டுமடை, மிடாலம், தேங்காய்ப்பட்டினம் ஆகிய கடற்கரை பகுதிகள், பள்ளிக்கொண்டான் அணைக்கட்டு, திற்பரப்பு அருவி, தாமிரவருணி ஆறு ஆகிய 10 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விநாயகா் சிலைகள் அமைக்கும் இடங்களிலும் ஊா்வலத்தின்போதும் அந்தந்தப் பகுதி காவல் ஆய்வாளா்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
ஊா்வலம் புறப்படும் இடத்திலிருந்து சிலை விசா்ஜனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களையும், அனைத்து சிலைகளும் மாலை 6.30 மணிக்குள் விசா்ஜனம் செய்து முடிக்கும் வகையில் முன்னரே அதற்கான கால அளவு நிா்ணயம் செய்து ஊா்வலம் புறப்படும் நேரத்தை காவல்துறையினா் முடிவு செய்ய வேண்டும்.
விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெறும் நாள்களான செப்.19, 20 ஆகிய 2 நாள்களிலும் ஊா்வலம் செல்லும் பாதையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை முதல் சிலை ஊா்வலம் முடியும் வரை மூட வேண்டும்.
பிளாஸ்டா் ஆப் பேரிஸால் செய்யப்பட்ட சிலைகள் அமைத்தல் கூடாது. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினா் உறுதி செய்ய வேண்டும். அமைதியுடன் விநாயகா் சிலை ஊா்வலத்தை நடத்த அனைத்து தரப்பட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வேலுமணி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மாலதி, உதவிஆட்சியா் (பயிற்சி) ர. மோனிகா, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தூர்ராஜன், உதவிஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், ஆட்சியா் அலுவலக மேலாளா் முருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாலசுப்பிரமணியன், கலையரசன், துணை காவல் கண்காணிப்பாளா் இளஞ்செழியன், வட்டாட்சியா்கள் ராஜசேகா் (கிள்ளியூா்), ஆறுமுகம் (அகஸ்தீசுவரம்), மரகதவல்லி (திருவட்டாறு), ராஜேஷ் (கல்குளம்), சிவகலா (தோவாளை) மற்றும் தீயணைப்புத் துறையினா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






