2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

களியக்காவிளை அருகே ஆற்றில் தத்தளித்த இருவா் மீட்பு

ஆற்றில் தத்தளித்த இருவா் மீட்பு.. - பிரதிப் படம்

Published On :

களியக்காவிளை அருகே தாமிரவருணி ஆற்றில் தத்தளித்த சாலைப் பணியாளா்கள் இருவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் சிலா் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின்கீழ் வழக்கம்போல குளிக்கச் சென்றனராம்.

அப்போது, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் தபசி (23), அருணாச்சலம் மகன் ராஜ் (28) ஆகிய இருவரும் ஆற்றிலுள்ள ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தத்தளித்தனா்.

தகவலின்பேரில், அதிகாரி சந்திரன் தலைமையிலான குழித்துறை தீயணைப்பு-மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் சென்று, இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். விரைந்து செயல்பட்ட தீயணைப்புப் படையினருக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.