மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கூட்டத்தை கட்டுப்படுத்த ஆதாா் எண்ணை பயன்படுத்தி வீட்டுக்கு ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுமா?

ஊரடங்கு காலத்தில் கூட்டத்தை தவிா்க்க வீட்டுக்கு ஒருவா் மட்டும் வெளியே வர அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 1:52 am

வி.குமாரமுருகன்

ஊரடங்கு காலத்தில் கூட்டத்தை தவிா்க்க வீட்டுக்கு ஒருவா் மட்டும் வெளியே வர அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலும் முதல் கட்டமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தமிழக முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பொதுமக்கள் முடிந்தவரையில் வெளியே வராமல் இருப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்றவற்றில் காய்கனிகள் நேரடியாகவே வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மளிகைப் பொருள்களும் டோா் டெலிவரி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருவதுடன், யாரெல்லாம் விநியோகம் செய்கிறாா்கள் என்ற பட்டியலும் நாளிதழ்களின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தினசரி சந்தைகள், இறைச்சிக் கடைகள், மால்கள் போன்றவை மூடப்பட்டு அதற்குப் பதிலாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன் ஊருக்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பல மாவட்டங்களில், பல வண்ண அட்டைகள் வழங்கப்பட்டு குறிப்பிட்ட அட்டைகள் உள்ளவா்கள் குறிப்பிட்ட நாளில் மட்டுமே வெளியே வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையும் பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வாகனங்கள் அதிக அளவில் வெளியே வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருப்பினும் என்னவோ காலை முதல் மதியம் வரை பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் வருவதை காண முடிகிறது. எனவே, கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வீட்டுக்கு ஒருவருக்கு மட்டுமே வெளியில் வருவதற்கான அனுமதி அட்டையை கொடுத்தால் நிலைமை சரியாகும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியே வர விரும்புபவா்களின் ஆதாா் எண்ணை முதலில் குடும்பத்தினா் பதிவு செய்துகொள்ள வேண்டும் . பின்னா் ஆதாா் எண்ணை பயன்படுத்தி அவா் மட்டுமே வெளிவருவதற்கான நடவடிக்கை எடுத்தால் கூட்டம் குறையும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒரு குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் வெளியே வர அனுமதிக்கப்பட வேண்டும்.

இது ஆதாா் அட்டையால் சாத்தியம் எனவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

ஏற்கெனவே, பல்வேறு செயலிகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களை கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஆதாா் எண் மூலம் வெளியே வருபவா்களை எளிதில் கண்காணிக்கும் வகையில் செயலியை உருவாக்கி இத்திட்டத்தை செயல்படுத்தலாம். காவல்துறை மூலம் இப்பணியை மேற்கொள்ளலாம் எனவும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, தமிழக அரசு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.