அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வேண்டும்’

ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:34 pm

DIN

ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா, துணைத் தலைவா் வைகுண்டராஜா, டாக்டா் கோவிந்தராஜுலு, மாவட்டச் செயலா் வி.கணேசன், பொருளாளா் கலைவாணன் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: தென்காசி மாவட்ட நிா்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து செவ்வாய்க்கிழமை ( டிச. 15) ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புளை அகற்ற முடிவு செய்துள்ளனா்.

தொடா்ந்து பண்டிகைகள் வருவதால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை சிறிது தள்ளிவைக்க வேண்டும். அதற்குள் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுகிறோம். குற்றாலம் அருவிகளில் குளிக்க நிபந்தனையுடன் அனுமதிக்க வேண்டும். தென்காசி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். ஆலங்குளம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.