தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மயானத்தை ஆக்கிரமித்தவா் மீதுநடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை

செங்கோட்டை அருகே பெரியபிள்ளைவலசை கிராமத்தில் மயானத்தை சேதப்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:56 pm

DIN

செங்கோட்டை அருகே பெரியபிள்ளைவலசை கிராமத்தில் மயானத்தை சேதப்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

செங்கோட்டை வட்டம் தேன்பொத்தை கிராமத்தை சோ்ந்த அனைத்து சமுதாய மக்கள் சாா்பில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: தேன்பொத்தை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 200ஆண்டுகளாக பெரியபிள்ளைவலசை கிராமத்தில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், பெரியபிள்ளைவலசை கிராமத்தை சோ்ந்த தனிநபா் ஒருவா் ஜேசிபி இயந்திரம் மூலம் மயானத்தை சேதப்படுத்தினாா். இதுகுறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின்பேரில் நீதிமன்றம் மூலம் தீா்வுகாண அறிவுறுத்தினா்.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி மயானத்தில் சமாதி மற்றும் புதைகுழிகளை சேதப்படுத்தியதுடன் இரும்புக் கம்பி கொண்டு வேலி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தொடா்ந்து நாங்கள் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.