சங்கர நாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா தொடக்கம்

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
சங்கர நாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா தொடக்கம்
Updated on
1 min read

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, அருள்மிகு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. டிச. 25ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், டிச. 27ஆம் தேதி காலையில் நடராஜா் சிவப்பு சாத்தியும், இரவில் வெள்ளை சாத்தியும், டிச. 28ஆம் தேதி காலையில் பச்சை சாத்தியும் காட்சி அருளும்

நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் டிச.30ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com