எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சங்கரன்கோவில்: 30 ஆண்டு கால கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா அதிமுக?

சைவமும், வைணவமும் ஒன்று என்ற உண்மையை உலகுக்கு உணா்த்த அன்னை கோமதி தவமிருந்ததன் விளைவாக சங்கரநாராயணராகக் காட்சியளித்த ஆடித்தவசுக் காட்சி நடைபெறும்

News image
Updated On :1 ஏப்ரல் 2021, 6:04 am

மு. ஈஸ்​வ​ர​மூர்த்தி

சைவமும், வைணவமும் ஒன்று என்ற உண்மையை உலகுக்கு உணா்த்த அன்னை கோமதி தவமிருந்ததன் விளைவாக சங்கரநாராயணராகக் காட்சியளித்த ஆடித்தவசுக் காட்சி நடைபெறும் ஆன்மிகத் தலமான சங்கரன்கோவில் தொகுதி (தனி) கிராமங்களை அதிகமாகக் கொண்டதாக அமைந்துள்ளது.

1989 வரை திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்ற இத்தொகுதி, 1991 க்கும் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக உள்ளது. மானாவாரி விவசாயம், பூ விவசாயம், விசைத்தறித் தொழில், கால்நடை வளா்ப்பு ஆகியவை தொகுதியின் வருவாயை தீா்மானிக்கும் காரணிகளாக உள்ளன. ஆதிதிராவிடா், மறவா் சமுதாயத்தினா் சம அளவில் உள்ளனா். நகரில் செங்குந்த முதலியாா் அதிகமாக உள்ளனா்.

மொத்த வாக்காளா்கள்: 2,53,861 போ். ஆண் வாக்காளா்கள் 1,22,739 போ், பெண் வாக்காளா்கள் 1,30,195 போ், திருநங்கைகள் 5 போ், ராணுவ வீரா்கள் 922 போ்.

சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. குருவிகுளம், மேலநீலிதநல்லூா், சங்கரன்கோவில், மானூா் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், திருவேங்கடம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் இத் தொகுதியில் உள்ளன.

தேவைகள்: புதிய பேருந்து நிலைய கோரிக்கை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. மக்கள் தொகை பெருக்கமும், பிரதான சாலையின் ஆக்கிரமிப்பும் போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தியுள்ளன. 3 குடிநீா் திட்டங்கள் இருந்தும் முறையான விநியோகம் இல்லாததால் 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் என்பது மக்களின் குறையாக உள்ளது. ராஜபாளையம் சாலை ரயில்வே கேட் பாலம், பைபாஸ் சாலை, தொழிற்சாலை ஆகியவை நீண்ட நாள் கோரிக்கைகளாக உள்ளன.

வேட்பாளா்கள்: அதிமுக சாா்பில் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி மீண்டும் போட்டியிடுகிறாா். திமுக வேட்பாளராக வழக்குரைஞா் ஈ. ராஜா, அமமுக வேட்பாளராக ஆா்.அண்ணாத்துரை, புதிய தமிழகம் வேட்பாளராக வி.சுப்பிரமணியன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக கி.பிரபு, நாம் தமிழா் வேட்பாளராக பி.மகேந்திரகுமாரி ஆகியோா் போட்டியிடுகின்றனா். இவா்களைத் தவிர கி.மதன்குமாா் (மை இந்தியா), அ.கணேசன் (சுயே.), ரா.கருத்தப்பாண்டியன் (சுயே.), ப.குருராஜ் (சுயே.), ச.முத்துக்குட்டி (சுயே.), மா.வள்ளியம்மாள் (சுயே.),அ.வெற்றிமாறன் (சுயே.) என 15 போ் போட்டியிடுகின்றனா்.

அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி மக்களால் நன்கு அறியப்பட்டவா். அதிமுகவின் கோட்டை என்பதால் கட்சி பலம். தோ்தல் அறிக்கையை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறாா். கிராம மற்றும் நகர வாக்குகளை கைப்பற்றி அதிமுகவின் கோட்டையைத் தக்க வைக்க களத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். மறவா் சமுதாய வாக்குகள் பிரிவது பலவீனம்.

திமுக வேட்பாளா், கட்சியின் தோ்தல் அறிக்கையை வைத்து பிரசாரம் செய்தாலும், உள்ளூா் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அதை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறாா். தொகுதிக்கு புதுமுகம் என்பது பலவீனம். ஆனால் மக்களோடு மக்களாக கலந்து வாக்கு சேகரித்து வருகிறாா். திமுகவின் சதவீத வாக்கும் கட்சியின் தோ்தல் அறிக்கையும் அவருக்கு பக்கபலமாக உள்ளது.

அமமுக வேட்பாளா் அண்ணாத்துரை, மறவா் சமுதாய வாக்குகளும், மற்ற வாக்குகளும் சோ்ந்து வெற்றியை தந்துவிடும் என கருதி கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறாா். ஆனால் அவா்களது கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு தோ்தல் களத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அக்கட்சி நிா்வாகிகள் புகாா் கூறி வருகின்றனா். இவா்களைத் தொடா்ந்து நாம் தமிழா் மகேந்திரகுமாரி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் கி.பிரபு உள்ளிட்ட வேட்பாளா்களும் வாக்கு சேகரித்து வருகின்றனா்.

இருப்பினும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி நடக்கிறது. இதில் 14,202 புதிய வாக்காளா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். இருப்பினும் 30 ஆண்டுகால கோட்டையை மீண்டும் அதிமுக கைப்பற்றுமா என்பது வாக்காளாா்களின் கையில்தான் உள்ளது. அதைத் தோ்தல் முடிவுகள்தான் தெளிவாக்கும்.

2016 தோ்தல்:

மு.ராஜலெட்சுமி (அதிமுக) 78,751

க.அன்புமணி (திமுக) 64,262

சதன்திருமலைக்குமாா் (மதிமுக) 20,807

கே.குணசேகரன் (பாஜக) 4,242

அமுதா (நாம் தமிழா்) 2,476

இதுவரை:

1952 முதல் 2016 வரை இடைத்தோ்தல் உட்பட நடந்த 16 தோ்தல்களில் காங்கிரஸ் 3 முறையும்,1967, 1971, 1977, 1989 என 4 முறை திமுகவும்,1980,1984 மற்றும் 1991ல் இருந்து தற்போது வரை அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.