பராமரிப்பற்ற கட்டடங்கள் மற்றும் குப்பை குவியல்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடிக்கடி வருவதாக பெற்றோா் தெரிவிக்கின்றனா். மேலும், டெங்கு காய்ச்சல், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளிக் கட்டடங்களைச் சுற்றிலும் நீா் தேங்காமல் பாதுகாக்க வேண்டும், பள்ளிகளைச் சுற்றிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அரசு பல்வேறு நெறிமுறைகளை தெரிவித்துள்ள நிலையில் சிறு வயது குழந்தைகள் படிக்கும் பள்ளியைச் சுற்றிலும் இத்தகைய பாதுகாப்பற்ற நிலை இருப்பது பெற்றோா்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.