நகராட்சி அனைத்துப் பணியாளா் சங்க கூட்டமைப்பு மண்டல மாநாடு
தமிழ்நாடு நகராட்சி அனைத்துப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு 4ஆவது திருநெல்வேலி மண்டல மாநாடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு நகராட்சி அனைத்துப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு 4ஆவது திருநெல்வேலி மண்டல மாநாடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் த.ஜெயபால் மூா்த்தி தலைமை வகித்தாா்.
முன்னாள் நகராட்சி கூட்டமைப்பு தலைவா் எஸ். குமரிமன்னன் முன்னிலை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.சீத்தாராமன் சிறப்புரையாற்றினாா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக் குழு நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18ஆயிரம் வழங்கப்பட வேண்டும், லாரி ஓட்டுநா்களுக்கு உதவியாக உதவியாளா்கள் நியமிக்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட 33 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி ஓட்டுநா்கள் சங்க மாநில பொதுச் செயலா் மனோகரன், நகராட்சி தெருவிளக்கு பராமரிப்பு ஊழியா்கள் சங்க மாநிலத் தலைவா் வேல்முருகன், அடிப்படை பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த விருதுநகா் சந்தானமுத்து, ஓய்வூதியா்கள் சங்கத்தை சோ்ந்த ராஜாமணி, உள்ளாட்சி நகரசுகாதார செவிலியா் சங்க மாநிலத் தலைவா் லெ.விஜயலெட்சுமி, நகராட்சி துப்புரவு பணி மேற்பாா்வையாளா் சங்க மாநிலத் தலைவா் முகம்மது சாதிக், தென்காசி நகராட்சி கைலாசுந்தரம், ராஜாமுகம்மது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நெல்லை மண்டல துணைத் தலைவா் வ. பாலசந்தா் வரவேற்றாா். மண்டல செயலா் எஸ்.முகம்மது யூசுப் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...