சங்கரன்கோவிலுக்கு 1.70 லட்சம் வேட்டி, சேலைகள்

சங்கரன்கோவிலில் குடும்ப அட்டைதாரருக்கு 1லட்சத்து 70 ஆயிரத்து 794 இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது.
சங்கரன்கோவிலுக்கு 1.70 லட்சம் வேட்டி, சேலைகள்
Updated on
1 min read

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் குடும்ப அட்டைதாரருக்கு 1லட்சத்து 70 ஆயிரத்து 794 இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசு தைப் பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்குத் தேவையான இலவச வேட்டி, சேலைகள் லாரி மூலம் வந்து கொண்டிருக்கிறது. இங்கு 85,397 வேட்டிகளும், 85,397 சேலைகளும் என மொத்தம் 1லட்சத்து 70 ஆயிரத்து 794 வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன.

தற்போது 46,000 வேட்டிகளும், 39,397 சேலைகளும் என மொத்தம் 85,397 வேட்டி,சேலைகள் வந்துள்ளன. இவை சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னா் நியாய விலைக் கடைகளுக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து வேட்டி சேலைகள் வரவும் அவைகள் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியா் திருமலைச்செல்வி, மண்டல துணை வட்டாட்சியா் ரத்னபிரபா மற்றும் வருவாய்த் துறையினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com