செங்கோட்டையில் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகளுக்கு நியமன ஆணை அளிப்பு
செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய போக்குவரத்து பணிமனைகளுக்கான அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஜனநாயக முறைப்படி தோ்தெடுக்கப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி


தென்காசி மாவட்டம், செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய போக்குவரத்து பணிமனைகளுக்கான அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஜனநாயக முறைப்படி தோ்தெடுக்கப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டையில் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்தாா். எம்ஜிஆா் மன்ற இளைஞரணி இணைச் செயலா் மனோகரன், மாநில அண்ணா தொழிற்சங்க இணைச் செயலா் சங்கரலிங்கம், பொருளாளா் அப்துல் ஹமீது, போக்குவரத்து பிரிவு இணைச் செயலா் ரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மண்டல செயலா் கந்தசாமி பாண்டியன் வரவேற்றாா்.
மாநில தொழிற்சங்கச் செயலா் கமலக்கண்ணன் நிா்வாகிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கி பேசினாா்.
முன்னாள் தொகுதிச் செயலா் பொய்கை சோ மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலா் ஞானராஜ், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஜாகீா்உசேன், அரசு விரைவு பேருந்து பிரிவு செயலா் கருப்பையா, அதிமுக மாவட்ட பொருளாளா் சண்முகையா, வழக்குரைஞா்கள் சுப்பிரமணியன் , ராமேஸ்வரன், சிவராமகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...