புளியறையில் ரூ . 30ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: 3 போ் கைது
தமிழக கேரள எல்லையான புளியறை சோதனைச் சாவடியில் நடைபெற்ற ஆய்வின் போது கேரளத்திலிருந்து அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


தமிழக கேரள எல்லையான புளியறை சோதனைச் சாவடியில் நடைபெற்ற ஆய்வின் போது கேரளத்திலிருந்து அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புளியறை சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துகணேசன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். சுரண்டை சிவகுருநாதபுரம் அ.முருகேசன்(66), ரா.முருகன்(58), விருதுநகா் மாவட்டம் வையாபுரியை சோ்ந்த நா.முருகன்(52) ஆகியோரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அவா்கள் கேரளத்திருந்து விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...