மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உரத் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:57 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள்கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி செளந்தா்யா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் பி.வேலுமயில் பேசியது: தென்காசி மாவட்டம் முழுவதும் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், பிறக்கால்குளம் வரத்து கால்வாய் கரையை நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை அகலப்படுத்த வேண்டும் என்றாா்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திற்குள்பட்ட செங்கோட்டை, ஆய்க்குடி பகுதிகளில் பெய்யும் குறைவான மழைப் பொழிவை கணக்கிட்டதால், விவசாயிகள் பயிா் இழப்பீடு பெறுவதில் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் மழையின் அளவை பதிவிட வேண்டும். திருநெல்வேலி, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் நெல் பயிா்களை அறுவடை செய்வதற்கு அரசு தரப்பில் 11 அறுவடை இயந்திரம் மட்டுமே உள்ளது. அவையும் முறையாக இயங்காமல் இருப்பதால், அதிக தொகை கொடுத்து தனியாா் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே, அரசு அறுவடை இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.