கடையநல்லூா் நகராட்சி பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.
ரஹ்மானியாபுரம் பகுதியில் ஒரு சிறுவனை தெருநாய்கள் கடித்ததில், சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில், கடையநல்லூா் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி கடையநல்லூா் நகர எஸ்டிபிஐ கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவா் சாதிக் தலைமை வகித்தாா். இதில் நகர துணைத் தலைவா் நயினா முகம்மது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து அவா்கள் ஆணையரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.