தென்காசி மாவட்டத்தில் வாகனச் சோதனை: 407 வழக்குகள் பதிவு
தென்காசி மாவட்டத்தில், வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிர வாகனச் சோதனையில் வாகனச் சட்டங்களை மீறியதாக 407 வழக்குகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 73 போ் மீதும் வழக்குப் பதிவு


தென்காசி மாவட்டத்தில், வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிர வாகனச் சோதனையில் வாகனச் சட்டங்களை மீறியதாக 407 வழக்குகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 73 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் வாகனச் சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபா்கள் தங்கியுள்ளனரா என்பது குறித்த சோதனை, பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், 796 வாகனங்கள் சோதனையிடப்பட்டு, மோட்டாா் வாகனச் சட்டத்தை மீறியதாக 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 73 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...