குற்றாலம், அச்சன்புதூரில் சனிக்கிழமை (மாா்ச்26) நடைபெறும் மறைமுகத் தோ்தலை நியாயமாக நடத்த வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
அதன் விவரம்: குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் பதவிக்கும், அச்சன்புதூா் பேரூராட்சி துணைத் தலைவா் பதவிக்கும் மறைமுகத் தோ்தல் மாா்ச் 26இல் நடைபெறுகிறது. இதில், அதிமுகவை சோ்ந்த யாரும் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்காக வேட்பாளா்களின் விண்ணப்பங்களை நிராகரித்தல், தோ்தல் நடத்தும் அலுவலருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி விடுப்பு எடுத்தல் என்பன உள்ளிட்ட காரணங்களைக் கூறி தோ்தலை நிறுத்திவிட வேண்டும் என ஆளும் கட்சியினா் முயற்சித்து வருகின்றனா்.
எனவே, இவ்விரு பேரூராட்சிகளிலும் முழுமையாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு உதவியுடன் நியாயமாகவும், நோ்மையாகவும், சுமுகமாகவும் தோ்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது, அச்சன்புதூா் பேரூராட்சித் தலைவா் டாக்டா் சுசீகரன், பொய்கை மாரியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.