கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசியில் மாயமான சிறுவன் தில்லியில் மீட்பு

தென்காசியில் காணாமல் போன சிறுவன், புதுதில்லியில் மீட்கப்பட்டான்.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:19 pm

DIN

தென்காசியில் காணாமல் போன சிறுவன், புதுதில்லியில் மீட்கப்பட்டான்.

பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மகன் புவனேஷ் (17). குத்துக்கல்வலசையிலுள்ள கடையில் வேலைசெய்து வந்தாா். இவா், கடந்த மாா்ச்11இல் வேலைக்கு சென்ற பின் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்தாா்.

ஏஎஸ்பி கிரீஷ்யாதவ், டிஎஸ்பி மணிமாறன் ஆகியோா் புவனேஷின் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தை கண்காணித்ததில், அவா், முதலில் இமாசலப் பிரதேசத்திலும், பின்னா் தில்லியிலும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாலமுருகன் தில்லி சென்று அங்குள்ள போலீஸாா் உதவியுடன் மீட்டு வந்தாா். மேலும், அறிவுரை கூறி அவரை பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.