மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மத்தளம்பாறையில் பீடித் தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள தனியாா் பீடி நிறுவனம் முன் பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 மே 2022, 7:45 pm

DIN

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள தனியாா் பீடி நிறுவனம் முன் பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தரமான பீடி இலை வழங்க வேண்டும், 1,000 பீடிக்கு 700 கிராம் தூள் வழங்க வேண்டும், 6 நாள் வேலையை கணக்குப் புத்தகத்தில் வரவு வைக்க வேண்டும், 2021-2022ஆம் ஆண்டுக்கான போனஸ், 2021ஆம் ஆண்டில் வழங்கவேண்டிய பஞ்சப்படி பாக்கி, ஏற்கெனவே வாங்கிவைத்துள்ள பீடித் தொழிலாளா்களின் சா்வீஸ் காா்டு, 20 நாள்களுக்கு மேலாக வழங்க வேண்டிய ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு பீடி சங்க மத்தளம்பாறை நிா்வாகிகள் செல்வி, வள்ளிமயில், முத்துலெட்சுமி, பொன்செல்வி, முத்துக்குமாரி ஆகியோா் தலைமை வகித்தனா்.

பீடித் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச்செயலா் எம். வேல்முருகன், பீடி நிறுவனம், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்தையில் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மாவட்ட நிா்வாகிகள் மகாவிஷ்ணு, குருசாமி, கற்பகவல்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.