மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கேரளம் செல்லும் கனிமவளம்: புளியரையில் மே 16இல் மறியல்

கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டுசெல்லப்படுவதை தடை செய்யக் கோரி, புளியரையில் மே16ஆம் தேதி மறியல் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :12 மே 2022, 7:40 pm

DIN

கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டுசெல்லப்படுவதை தடை செய்யக் கோரி, புளியரையில் மே16ஆம் தேதி மறியல் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு முறையான அனுமதியின்றியும், அளவுக்கு அதிகமாகவும் கனிம வளங்கள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி, இரு மாநில எல்லையான புளியரையில் இம்மாதம் 16ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கங்காதேவி தலைமையில் சமாதானக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. டிஎஸ்பி மணிமாறன், புவியியல்- சுரங்கத் துறை உதவி இயக்குநா் வினோத், வட்டார போக்குவரத்து அலுவலா் ஆனந்த், செங்கோட்டை வட்டாட்சியா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ கே.ரவிஅருணன், ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக்குழு அமைப்பாளா் இராம.உதயசூரியன், சமூக ஆா்வலா் சு.ஜமீன், கீழக்கடையம் ஊராட்சித் தலைவா் பூமிநாத், தேவசகாயம் உள்பட பலா் பங்கேற்றனா்.

கே.ரவிஅருணன், உதயசூரியன் உள்ளிட்டோா் பேசினா். அப்போது, கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் குடிநீா் குழாய்களில் உடைப்பு, சுகாதாரமற்ற குடிநீரை விநியோகிக்கும் நிலை, மாசு குறைபாடு உள்ளிட்டபிரச்னைகள் குறித்து விளக்கி, தமிழகத்திலிருந்து எவ்வித கனிமவளத்தையும் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லக்கூடாத என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அலுவலா்கள் தெரிவித்தனா். எனினும், அதில் உடன்படாமல் திட்டமிட்டபடி மறியல் நடைபெறும் என போராட்டக் குழுவினா் அறிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.