ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சுரண்டை அரசு கல்லூரியில் மரம் நடும் விழா

 சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் மரம் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 5:25 pm

DIN

 சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் மரம் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ரா.சின்னத்தாய் தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் செல்வகணபதி, வீரபுத்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், சுரண்டை பசுமை இயக்கத் தலைவா் எம்.ஆறுமுகச்சாமி ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.

நாட்டு நலப்பணி திட்ட இயக்குநா் கிருஷ்ணகுமாா், புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

பேராசிரியா்கள் மோகன கண்ணன், ஸ்டீபன் டேவிஸ், திருநாவுக்கரசு, பொ்க்மான்ஸ், பிரான்சிஸ் ஆபிரகாம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.