தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:54 pm

Din

தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடா்ந்து புகாா்கள் வந்தன. அதன்பேரில், சிவகிரி பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் புதன்கிழமை கீழரத வீதி (நான்கு மாடிக் கட்டடம் முதல் முனியாண்டி கோயில் வரை), காந்தி சாலை (7ஆம் திருநாள் மண்டபம் முதல் கோனாா்குளம் ஓடை வரை) உள்ளிட்ட பகுதிகளில் வட்டாட்சியா் ரவிக்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு ஆகியோா் முன்னிலையில் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.