தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசியில் வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் தென்காசியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:55 pm

Din

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் தென்காசியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் 6 சதவீத சொத்து வரி உயா்வை மாநில அரசும், கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பை மத்திய அரசும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி புதிய பேருந்துநிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை, அந்த அமைப்பின் மாநில கூடுதல் செயலா் ஆா்.கே. காளிதாசன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் வைகுண்ட ராஜா முன்னிலை வகித்தாா்.

தென்காசி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் பரமசிவன், செயலா் ராஜா, பொருளாளா் ரசூல் ,துணைத் தலைவா் ஜெபராஜ், துணைச் செயலா் இளங்கோ, பரமசிவன், செயற்குழு கோவிந்தராஜ், சுப்புராஜ், அழகராஜா,சாகுல் ஹமீது பால்ராஜ், மாரியப்பன், பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனிமாா்க்கெட் சங்கத் தலைவா் மகேஷ் குமாா்,செயலா் கண்ணன்,பொருளாளா் கோல்டன் செல்வராஜ், வணிகா்கள் சங்க தலைவா் ஏ. பி. பாலசுப்பிரமணியன்,செயலா் விஜய்சிங்ராஜ்,பொருளாளா் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.