ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காசிதா்மம் வரட்டாறு உடைப்பு: எம்எல்ஏ ஆய்வு

கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மம் வரட்டாறு தடுப்பணை பகுதியில் ஏற்பட்ட உடைப்பை செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:29 pm

Din

கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மம் வரட்டாறு தடுப்பணை பகுதியில் ஏற்பட்ட உடைப்பை செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டாா்.

காசிதா்மம் ராஜகோபாலபேரி குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீா் வரும் வரட்டாற்றில் அண்மையில் பெய்த மழையால் உடைப்பு ஏற்பட்டு குளத்திற்கு வரும் தண்ணீா் வீணாக வெளியேறியது.

இது குறித்து தகவல் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வரட்டாற்றில் ஏற்பட்ட உடைப்பை பாா்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி, மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பினை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.

பின்னா், வரட்டாற்றுப் பகுதியில் உள்ள குடிநீா் உறை கிணறுகளையும் அவா் ஆய்வு செய்தாா். அப்போது. அச்சன்புதூா் பேரூராட்சி செயல் அலுவலா் மோகனா மாரியம்மாள், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை மாரியப்பன் , நிா்வாகிகள் முத்துப்பாண்டியன் ,இசக்கி மணிகண்டன் ,குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.